மட்டக்களப்பில் சக மாணவியை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய மாணவன் கைது
மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் தரம் 11இல் கல்விகற்றுவரும் 16 வயது மாணவி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய அதே தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு நேற்று (27.09.2024) கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காதல் உறவு
பாதிப்புக்கு உள்ளான மாணவியின் தாயார் வெளிநாட்டில் வேலைவாய்பு பெற்று சென்றுள்ள நிலையில் அவரின் அம்மம்மாவின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.
அதேவேளை கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில் அவரின் தாயாரும் வெளிநாட்டில் வேலை வாய்புக்காக சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவன், பக்கத்து வீட்டு மாணவியுடன் பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்று வந்துள்ள நிலையில் காதல் உறவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்திய பரிசோதனை
இந்நிலையில் மாணவனின் வீட்டிற்கு கல்வி கற்பதற்காக மாணவி சென்று வந்துள்ள நிலையில், மாணவியை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து வயிற்று வலி ஏற்பட்டதையிட்டு மாணவியை நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
இதன்போது மேற்கொண்ட பரிசோதனையில் மாணவி 2 மாத கற்பணியாகியுள்ளது தெரியவந்ததையடுத்து வைத்தியர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |