மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கான போராட்டக்காரர்கள் மீதான வழக்கு: ஊடகவியலாளருக்கு பிடியாணை

Batticaloa SL Protest Law and Order
By Kumar Jan 22, 2025 10:25 PM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பில் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கில் ஊடகவியலாளர் ஒருவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கானது, ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்டது. 

இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது குறித்த நபர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டதுடன் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக இலங்கை நீதியமைச்சர் தெரிவித்த கருத்திற்கு கண்டனம் தெரிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக இலங்கை நீதியமைச்சர் தெரிவித்த கருத்திற்கு கண்டனம் தெரிவிப்பு

தொடரப்பட்ட வழக்கு 

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சென்ற போது கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கான போராட்டக்காரர்கள் மீதான வழக்கு: ஊடகவியலாளருக்கு பிடியாணை | Struggle For Mayilathamadu Madhavan Issue

இந்த குற்றச்சாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் இரண்டு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேக நபர்கள் பெயர் குறிப்பிடப்பட்டு ஏறாவூர் பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

சரீர பிணை 

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நாடாளுமன்ற அமர்வு காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லையென நீதவானின் கவனத்திற்கு சட்டத்தரணியால் கொண்டுவரப்பட்டது.

மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கான போராட்டக்காரர்கள் மீதான வழக்கு: ஊடகவியலாளருக்கு பிடியாணை | Struggle For Mayilathamadu Madhavan Issue

இதேபோன்று ஏற்கனவே நீதிமன்றுக்கு சமூகமளிக்காத நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன், வெளிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றின் கவனத்திற்கு பொலிஸாரினால் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் ஊடகவியலாளர் சசிகரனுக்கு திறந்த பிடியாணை பிறக்கப்பட்டதுடன் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திற்கும் அறிவிக்குமாறும் உத்தரவிட்ட நீதவான், இன்றைய நீதமன்றில் முன்னிலையான 27பேருக்கும் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையை ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்கும் நிபந்தனையுடன் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். 

அத்துடன், குறித்த வழக்கின் விசாரணைக்காக எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி வரையில் வழக்கினை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US