கிராம சேவகரின் கொலைக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்
அம்பன்பொல தெற்கு கிராமசேவகர் கொல்லப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக நேற்று ( 07 ) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
நிக்கவரட்டிய பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட, அம்பன்பொல பொலிஸ் பிரிவில், அம்பன்பொல தெற்கு கிராமசேவகர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனை கண்டித்து மலையகத்தில் சில இடங்களில் கிராம சேவகர்களின் காரியாலயங்களுக்கு முன்பாக கறுப்பு மற்றும் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததோடு, போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது, மரணமடைந்த எமது சக உத்தியோகஸ்தரின் மரண விசாரணையைத் துரிதப்படுத்துங்கள், இனிமேலும் இந்த இரத்த வெறியாட்டம் வேண்டாம், அரசே கிராம உத்தியோகஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கு, பொதுமக்கள் சேவகனுக்கு கிடைத்த பரிசா இது, கயவர்களைக் கைது செய், போன்ற கருத்துகளை போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.










16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
