உடனடியாக நடைமுறைக்கு வரும் தடை உத்தரவு ..! புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் நிலையில், மேலதிக வகுப்பு மற்றும் கல்வி செயற்பாடுகளுக்கு எதிராக பரீட்சை ஆணையம் கடுமையான தடைகளை விதித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை 2,532 மையங்களில் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கான அனைத்து பயிற்சி வகுப்புகள், பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் மாதிரி வினாத்தாள்களை அச்சிடுவது அல்லது விநியோகிப்பது ஆகியவை நேற்று(04.08.2026) நள்ளிரவு முதல் தேர்வு முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளன.
அதே போன்று, பரீட்சை மாதிரியான கேள்விகளை வழங்குவதாகக் கூறும் சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள் உள்ளிட்டவைகளை ஊடகங்களை வெளியிடுவதும் அல்லது வைத்திருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
கல்வி செயற்பாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை
இந்த நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் 9 அன்று 2,723 மையங்களில் நடைபெறவுள்ள 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வி செயற்பாடுகளுக்கு இன்று(05.08.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு தனிநபர், நிறுவனம் அல்லது தரப்பினரும் 1968 ஆம் ஆண்டின் பொதுத் தேர்வுகள் சட்டம் எண் 25இன் கீழ் குற்றவாளியாக பார்க்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சை ஆணையகத்திற்கு தெரியப்படுத்தலாம்.
இதன்படி, முறைப்பாடுகளை பொலிஸ் தலைமையகம்: 011‑2421111 பொலிஸ் அவசர எண்: 119 பரீட்சை ஆணையம் அவசர உதவி எண்: 1911 பள்ளித் தேர்வுகள் அமைப்பு மற்றும் முடிவுகள் பிரிவு: 011‑2784208 / 011‑2784537 ஆகிய எண்களுக்கு அழைப்பை மேற்கொண்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.
நாட்டிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவரது மனைவியும்..! தொழிலதிபரின் திருமணத்தில் கசிந்த தகவல்