கடற்கொள்ளை கும்பல் மீது எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை! எடுக்கபட்டுள்ள தீர்மானம்
உள்ளூர் மற்றும் தமிழ்நாட்டு கடற்றொழிலார்களின் கடற்றொழில் வலைகளை சிதைத்தும் கடற்றொழில் உபகரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான உபகரணங்களை கொள்ளையடித்து வரும் கடற்கொள்ளையர் கும்பலை சேர்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் பலாலியில் உள்ள சங்க மண்டபத்தில் நேற்றைய தினம் (01.04.2026) நடாத்தப்பட்ட கடற்கொள்ளையர் விவகாரம் தொடர்பிலான கூட்டுறவு சங்க பொதுக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணி
ஆற்காட்டுத்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கொள்ளையிட முற்பட்ட பலாலியை சேர்ந்த அஜந்தன் என்பவரை செந்தூர் கடற்றொழிலாளர்களை பிடித்து கட்டி வைத்து கொடூரமாக தாக்கியதுடன் கரைக்கு கொண்டு சென்று தமிழ்நாட்டு பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
இந்தச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் இருதரப்பு உறவினை பாதிக்கும் வகையிலாக காணப்படுகின்ற நிலையில், குறித்த நபர் அங்கம் வகிக்கும் பலாலி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பொதுக்கூட்டத்தில் குறித்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடற்கொள்ளையர் விவகாரம் தொடர்பிலான கூட்டுறவு சங்கத் தலைவர் மோசஸ் அன்ரன் ரமணன் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் பலாலி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரும் பிரசன்னமாகி இருந்த நிலையில் கடற்கொள்ளை சம்பவம் தொடர்பிலும் அதனால் ஊருக்கு ஏற்பட்டு வரும் அவமானம் மற்றும் நெருக்கடிகள் தொடர்பிலும் தலைவரால் விரிவாக பேசப்பட்டது.
இதன்போது, குறித்த கடற்கொள்ளை சம்பவம் உண்மை என்பதுடன், இந்திய கடற்றொழிலாளர்களிடம் பிடிபட்ட அஜந்தன் உள்ளிட்டகடற்கொள்ளையர் குழுவினர் 2016 ஆம் ஆண்டில் இருந்து உள்ளூரில் பல களவுச் சம்பங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் உண்மையை உறுதி செய்யும் முகமாக குறித்த நபருக்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை சான்றாக கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து வலைத்தளங்களில் உண்மைக்கு மாறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதன் காரணமாக உண்மைகளை பதிவிட்ட சங்க தலைவருக்கு அஜந்தனின் குடும்பத்தினரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவசர பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு ஊர் மக்கள் இணைந்து இவர்கள்தான் இந்த களவு வேலைகளில் ஈடுபடுவது எனவும், இவ்வாறான செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஏகமனதாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் பிரதிகள், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர், கடற்றொழில் நீரியல் வளங்கள் துறை உதவிப்பணிப்பாளர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri