நகரப்பகுதிகளில் நாயினால் ஏற்படும் போக்குவரத்து அச்சம்: பயணிகள் கோரிக்கை

Mullaitivu Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Uky(ஊகி) Dec 09, 2024 06:12 PM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

நகரப்பகுதிகளில் நாயினால் ஏற்படும் போக்குவரத்து அச்சம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் போது நாய்களால் அச்சமேற்படுத்தப்படுவதாக பயணிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனினும், இதனுடன் தொடர்புடைய யாதொரு தரப்பினரும் இது தொடர்பில் கவனமெடுத்து நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தர்மபுரம் மற்றும் விசுவமடு நகர் பகுதிகளிலேயே இந்த போக்குவரத்து அச்சம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரட்டைக் குற்றச்சாட்டுக்கள் 

அதிகமான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளாக விசுவமடு மற்றும் தர்மபுரம் நகரப் பகுதிகள் உள்ளன.

நகரப்பகுதிகளில் நாயினால் ஏற்படும் போக்குவரத்து அச்சம்: பயணிகள் கோரிக்கை | Street Dogs Issue In Mullaitivu Peoples Request

அத்தோடு, இந்த இரு நகரங்களை ஊடறுத்து முல்லைத்தீவு பரந்தன் வீதி (A35) செல்வதால் அதனூடாக நீண்ட தூரப் பயணிகளின் பயணங்களும் சமநேரத்தில் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

மாலை நேரப் பொழுதில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதையும் இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும்.

இரவுப்பொழுதினை ஒளியூட்டுவதற்காக வீதி விளக்குகள் போதியளவில் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலையும் இந்த நகரப் பகுதிகளில் பெறப்பட்ட அவதாரங்களில் உள்ளடங்கின்றது.

அதிக மக்கள் வந்து செல்லும் நகரப்பகுதிகளாக இருந்த போதும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகள் போதியளவில் இல்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறது.

வெளிச்சம் அதிகமான ஒரு பாதையில் நாய்களால் ஏற்படக்கூடிய போக்குவரத்து அச்சம் குறைவாகவே இருக்கும் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இந்த வகையில் தர்மபுரம் மற்றும் விசுவமடு நகரப்பகுதிகளில் போதியளவிலான இரவு மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வீதி ஒளியூட்டப்படல் அவசியமாகும். அவ்வாறில்லாத இந்நிலை மற்றொரு குற்றச் சாட்டாகவும் இருக்கின்றது.

நாய்களால் நெருக்கடி 

இந்நகர வீதிகளில் அதிகளவான நாய்கள் கட்டாக்காலி நாய்களாக திரிவதனால் விபத்துக்களை அவை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நெருக்கடியை தாம் எதிர்கொள்வதாக பயணிகளில் பலரும் குறிப்பிடுகின்றனர்.

நகரப்பகுதிகளில் நாயினால் ஏற்படும் போக்குவரத்து அச்சம்: பயணிகள் கோரிக்கை | Street Dogs Issue In Mullaitivu Peoples Request

எதிர்பாராத நேரத்தில் வாகனங்களுக்கு குறுக்காக பாயும் போது நாயுடன் வாகனம் மோதிக் கொள்வதை தவிர்ப்பதற்காக திடீரென தடுப்பிடும் பொழுது, ஏற்படும் அசௌகரியம் பாரிய போக்குவரத்து மனவுழைச்சலுக்கும், அச்சத்திற்கும் காரணமாகிப் போகும் சூழல் அப்பகுதியில் இருக்கின்றது.

இது தொடர்பாக உளநல ஆலோசகராக பணியாற்றும் பயணியொருவரும் தன் கருத்துக்களை பயணிகளுடனான கேட்டல்களின் போது பகிர்ந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாய்களால் உந்துருளியில் பயணம் செய்வோரே அதிகளவில் நெருக்கடிக்குள்ளாவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அதிகமான நாய்கள் வீதியிலேயே படுத்துறங்குவதை அவதானிக்கலாம்.இந்த நாய்களால் ஏற்படும் நெருக்கடியென்து தர்மபுரம் மற்றும் விசுவமடு நகர் பகுதிகளில் பல வருடங்களாக தொடரும் அசௌகரியம் என நகர்ப்புற பணியாளர் ஒருவரும் இது தொடர்பில் குறிப்பிட்டு கருத்துரைத்து இருந்தார்.

பிரதேச சபையின் கவனம் 

தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு முன்னும் வீதியில் நாய்கள் நடமாடுவதோடு பல நாய்கள் பொலிஸ் நிலையம் செல்லும் வாசலில் வீதியில் படுத்துறங்குகின்றன. அதனை தாம் அவ்வீதியூடாக யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு சென்று வரும் நாட்களில் அவதானித்து இருந்ததாக இந்த தேடலின் போது பாடசாலை ஆசிரியர்கள் சிலரும் கூறுகின்றனர்.

நகரப்பகுதிகளில் நாயினால் ஏற்படும் போக்குவரத்து அச்சம்: பயணிகள் கோரிக்கை | Street Dogs Issue In Mullaitivu Peoples Request

பிரதேச சபைகளின் கவனத்திற்கு இது தொடர்பில் உரிய முற்படுத்தல்களை அப்பகுதி மக்கள் யாரும் செய்திருப்பதாக அறிய முடியவில்லை.

அவ்வீதியூடாக பயணிக்கும் பயணிகளும் இந்நெருக்கடி நிலையை தவிர்ப்பதற்காக தங்கள் அசௌகரியங்களை ஒரு பிரச்சினையாக முன்வைக்கத் தவறியிருப்பதையும் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

சமூகநலன் கருதி பிரதேச சபைகள் மற்றும் பிராந்திய சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நாய்களின் உரிமையாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் பொருத்தப்பாடான செயற்பாடுகளால் பயணிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணலாம் என்பதை இங்கே சுட்டிக்காட்டலாம்.

இந்த விடயம் உரிய தரப்புக்களால் கவனமெடுக்கப்பட்டு நல்ல ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தால் A35 வீதியூடான பயணம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

வடக்கில் ஆலயம் ஒன்றுக்கு தீவைப்பு: பொலிஸில் முறைப்பாடு

வடக்கில் ஆலயம் ஒன்றுக்கு தீவைப்பு: பொலிஸில் முறைப்பாடு

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை - மக்களுக்கு புதிய தகவல்

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை - மக்களுக்கு புதிய தகவல்

இலங்கையை மீண்டும் தோற்கடித்த தென்னாபிரிக்க டெஸ்ட் அணி

இலங்கையை மீண்டும் தோற்கடித்த தென்னாபிரிக்க டெஸ்ட் அணி

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW       
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US