திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை : பலத்த கட்டுப்பாடுகளை விதித்த ஈரான்
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், "போர்நிறுத்தத்தின் எஞ்சிய காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களின் பயணமும் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
இந்தக் கப்பல்களின் பயணம், ஐ.ஆர்.ஜி.சி (இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை) கடற்படையின் அனுமதியுடன், ஒரு “குறிப்பிட்ட பாதை” வழியாக நடைபெறும் என்று ஒரு மூத்த இராணுவ அதிகாரி கூறியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தற்போது மேற்கோள் காட்டியுள்ளது.
இராணுவக் கப்பல்களுக்கு தொடர்ந்து தடை
குறிப்பிட்ட வழித்தடமானது ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அந்த அதிகாரி அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

மூத்த இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஈரானின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளபடி, ஹோர்முஸ் நீரிணை வழியாக இராணுவக் கப்பல்கள் செல்வது தொடர்ந்து தடைசெய்யப்படும் என்றும் கு2றிப்பிடப்பட்டுள்ளது.