ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: ட்ரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்புக்கு இடையே கப்பல்கள் மீது தாக்குதல்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பில் ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டன.
இந்த உயர்மட்டச் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே கப்பல்கள் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓமான் கடற்கரைக்கு அப்பால் தமது கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
இது குறித்த மேலதிக விவரங்களை உடனடியாக வெளியிடாத இந்தியா, கப்பலில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவத்தில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஃபுஜைரா துறைமுகக் கடற்கரையில் நங்கூரமிட்டிருந்த கப்பல் ஒன்றிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் புகுந்து, அதை ஈரான் நோக்கிச் செலுத்தி வருவதாக பிரிட்டனின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிக்கும் ஈரானின் நடைமுறைகள் குறித்த புரிந்துணர்வைத் தொடர்ந்து, சில சீனக் கப்பல்கள் அந்த வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளதாக அந்த நாட்டின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் தூதுவரின் கோரிக்கையை ஏற்று, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையின் அடிப்படையில் இந்த வசதியை ஈரான் செய்துகொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam