அயர்லாந்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை: மின்சாரம் துண்டிப்பால் பலர் பாதிப்பு
அயர்லாந்தில் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக சுமார் 38,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
டொனேகல் கவுண்டியில் மணிக்கு 130கி.மீ வேகத்தில் கற்று வீசுவதனால் இன்று மதியம் வரை செம்மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வேல்ஸில் 138 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகின்றமையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பயண தடைகளும் ஏற்பட்டுள்ளன.
மின்சாரம் செயலிழந்துள்ளமையால் டொனேகல், கார்க், வெக்ஸ்ஃபோர்ட் மற்றும் கெர்ரி முழுவதும் 26,000 வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோகம் தொடர்பான அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை பெய்து வருவதனால் வெள்ள எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளதுடன் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri