பிரான்சில் துண்டிக்கப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையம் சென்றவரால் பரபரப்பு
பிரான்சில் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற ஒருவர் ஆணின் துண்டிக்கப்பட்ட தலையை பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தெற்கு பிரான்சின் Villeneuve மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ்நிலையம் சென்ற அந்த 38 வயது நபர், தாம் ஒரு கொலை செய்துள்ளதாக கூறி துண்டிக்கப்பட்ட தலையை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், தலை துண்டிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட ஆணின் உடல் ஒன்றை கைப்பறியுள்ளனர்.
அதேவேளை கொலை வழக்கு தொடர்பாக கைதாகியுள்ள அந்த நபர் ஏற்கனவே போதை மருந்து தொடர்பில் கைதாகி சிறை என்றவர் என கூறப்படுகிறது.
மேலும், போதை மருந்து தொடர்பாகவே, இந்த கொலை சம்பவமும் நடந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கைதான நபரை உளவியல் சோதனைக்கு உட்படுத்திய பின்னர், விசாரணைக்கு உட்படுத்த இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் உண்மையான பின்னணி இன்னும் முழுமையாக வெளிவரவிவில்லை என்பதுடன், குற்றவாளிக்கும் அவரால் பாதிக்கப்பட்டவருக்கும் இடையிலான உறவும் இன்னும் சரிபார்க்கப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan