பல கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் விசேட அதிரடிப்படையினரால் பறிமுதல்!
2021ம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கேரளா கஞ்சாவை கைப்பற்ற விசேட அதிரடிப்படை, 158 தேடுதல்களை நடத்தியுள்ளது. இந்நிலையில் 90 மில்லியன் ரூபா பெறுமதியான 696 கிலோ மர்ஜுனாவை கடந்த திங்களன்று விசேட அதிரடிப்படை கைப்பறியுள்ளது.
அதேநேரம் மன்னார் இலுப்புக்கடவை, கட்டலாம்பிட்டிய குளம் பகுதி வழியாக இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 105 கிலோ கேரளா கஞ்சாவை, விசேட அதிரடிப்படையினர் கடந்த திங்கள்கிழமை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலுப்புகடவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை சோதனைகளின் போது 162 சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படை கைது செய்தது