மகிந்தவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தை சி.ஐ.டியிடம் ஒப்படைக்க நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவதற்கான புதிய சட்டமூலம், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்த வீட்டை குற்றப் புலனாய்வுத் துறையிடம் புதிய வசதிகளுடன் கூடிய பணியிடமாக ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியங்களைத் தவிர, அதிகாரப்பூர்வ குடியிருப்புகள் உட்பட மற்ற அனைத்து வசதிகளும் இரத்து செய்யப்படும்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமை
மேலும், முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் புதிய சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் இன்று அல்லது நாளை சபாநாயகரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி மகிந்த ராஜபக்ச தற்போது வசித்து வரும் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசித்து வந்தார். அதற்கு முன்னர், பல அமைச்சர்கள் அங்கு வசித்து வந்ததமை குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam