கிளிநொச்சியில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள மணலை உரிய அனுமதிகளுடன் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை

Kilinochchi Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Kajinthan Aug 19, 2026 04:07 AM GMT
Report

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள மணலை அடுத்த வாரம் முதல் உரிய அனுமதிகளுடன் பொது மக்களுக்கு துரிதமாக விநியோகிப்பதற்கும், இரணைமடுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் சில இடங்களில் மண்ணைக் கழுவி மணல் பெற்றுக் கொள்ளும் பணிகளுக்கான கேள்விக் கோரலை விரைவாக மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் மற்றும் கிரவல் அகழ்வு, விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (18.08.2026) மாலை நடைபெற்ற போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

கலந்துரையாடல் ஏற்பாடு

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், இரணைமடு நீர்வழிந்தோடும் பகுதிகளில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள மணல், கழுவி எடுக்கப்பட்ட மணல் மற்றும் கிரவல் ஆகியவற்றை முறையாக விநியோகிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை எதிர்வரும் அக்டோபர் மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டிய நிலை இருப்பதால், கட்டுமானத் தேவைகளுக்கான மணல் மற்றும் கிரவல் தடையின்றிக் கிடைப்பது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கிளிநொச்சி மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தால் மணல் விநியோகத்துக்கான அனுமதி கோரப்பட்டுள்ளமை மற்றும் கழுவி எடுக்கப்படும் மணலை முறையாக விநியோகிப்பதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் தொடர்பிலும் அவர் எடுத்துரைத்தார்.

கிளிநொச்சியில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள மணலை உரிய அனுமதிகளுடன் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை | Steps Distribute Sand Public With Proper Permits

இதன்போது உரையாற்றிய ஆளுநர், “வட மாகாணத்தில் மாகாணத் திணைக்களங்கள் மற்றும் மத்திய அரசாங்கத் திணைக்களங்கள் ஊடாக பல்வேறு அபிவிருத்தி மற்றும் அரசாங்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்கள் நிலவுகின்றன.

மக்களுக்கு தேவையான மணலை அவர்கள் எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. அதிகரித்துள்ள விலை காரணமாக சாதாரண மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலைமையைச் சீர்செய்து, குறைந்த விலையில் மக்களுக்குத் தேவையான மணலை வழங்குவதற்கான ஒரு முறையான பொறிமுறையை உருவாக்குவதற்காக கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்” என தெரிவித்தார்.

மணல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம்

மணல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் மக்கள் மத்தியில் கோபம், ஏமாற்றம் மற்றும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், 'கூட்டங்கள் நடத்தப்படுகின்றன ஆனால் மக்களுக்கு தேவையான மணல் கிடைக்கவில்லை' என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அரச திணைக்களங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டுள்ள தெளிவான அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரச நிறுவனங்கள் சட்டரீதியான அனுமதிகளைப் பெறுவதற்காக அணுகும் போது செயன்முறைகள் நீடிக்கப்படுகின்ற நிலையில், தனிநபர்களுக்கு அதே திணைக்களங்களால் அனுமதிகள் விரைந்து வழங்கப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுவதாக அவர் குறிப்பிட்டார்.

'மக்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக நாங்கள் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தி, இறுக்கமான அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றோம். ஆனால் அவை நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஏற்படுகின்றது. அதேவேளை தனியார் தரப்பினருக்கு விரைந்து அனுமதிகள் வழங்கப்படுகின்ற நிலை ஏற்பட்டால், இது வெறும் நிர்வாகத் தாமதமாக மட்டும் பார்க்க முடியாத நிலையை உருவாக்குகின்றது. இத்தகைய செயற்பாடுகள் இந்த அரசாங்கத்தின் நற்பெயரைப் பாதிக்கும் வகையில் இடம்பெறும் சதிவேலையா என்ற சந்தேகத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றன' என ஆளுநர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள மணலை உரிய அனுமதிகளுடன் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை | Steps Distribute Sand Public With Proper Permits

அதேவேளை, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சால் கனியவளங்களின் அகழ்வு மற்றும் விநியோகம் தொடர்பாக புதிய சுற்றறிக்கை வரைவு வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். அதன் பிரகாரம், மாவட்டச் செயலாளரின் தலைமையில் அமைக்கப்படும் மாவட்டக் குழுவின் ஊடாக கனியவளங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் நடைமுறை வலுப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இடையூறுகள் தொடர்பில் ஆராய்வு

கலந்துரையாடலின் போது, கனகராயன் ஆற்று பகுதியில் ஏற்கனவே அள்ளிக் குவிக்கப்பட்டுள்ள மணலைத் துரிதமாக விநியோகிப்பது தொடர்பில் முதற்கட்டமாக ஆராயப்பட்டது. அதற்கான அனுமதிகளை வழங்குவதில் காணப்பட்ட இடையூறுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், உரிய சட்டரீதியான அனுமதிகளை பெற்று, கிளிநொச்சி மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தின் ஊடாக அடுத்த வாரம் முதல் மணலை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், குளங்களில் இருந்து மண் அகழ்ந்து கழுவும் செயன்முறை மூலம் பெறப்படும் மணலை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் விரைந்து கடிதங்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், அடுத்த மாத இறுதிக்குள் கழுவி எடுக்கப்பட்ட மணலை விநியோகித்து முடிக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

கல்மடுக்குளத்தில் இருந்து மண்ணைக் கழுவும் செயன்முறை இதுவரை ஆரம்பிக்கப்படாதமை தொடர்பில் ஆளுநர் கேள்வி எழுப்பியதுடன், அதனைத் தாமதமின்றி ஆரம்பிக்குமாறும் பணிப்புரை வழங்கினார். இதேபோன்று, ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள சில குளங்களில் மண் கழுவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாதமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு, அவற்றையும் உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இரணைமடுக்குளத்தில் மண் கழுவும் செயன்முறையை முன்னெடுக்கக்கூடிய மேலும் சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கான கேள்விக் கோரலை விரைந்து மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக, மேலும் இரு இடங்களில் ஆற்றுப்படுக்கைகள் மற்றும் நீர்வழிந்தோடும் வாய்க்கால்களைத் துப்புரவு செய்வதற்காக அகழப்படும் மண்ணைக் கழுவி மணல் பெற்றுக்கொள்ளும் பணிக்கான கேள்விக் கோரலையும் விரைவாக மேற்கொள்ள இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள மணலை உரிய அனுமதிகளுடன் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை | Steps Distribute Sand Public With Proper Permits

மக்களுக்குத் தேவையான மணலை நியாயமான விலையில், தடையின்றி விநியோகிப்பது ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு சில அதிகாரிகளின் பொறுப்பு மட்டுமல்ல என வலியுறுத்திய ஆளுநர், இச்செயன்முறையில் பங்கேற்கும் ஒவ்வொரு திணைக்களத்துக்கும் பொதுமக்களுக்கான சமூகப் பொறுப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

சட்டரீதியான நடைமுறைகளைப் பின்பற்றியபடியே, மக்களின் தேவையை முன்னுரிமைப்படுத்தி தாமதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், தூய்மை இலங்கை செயலணியின் மாவட்ட இணைப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பொறியியலாளர், பிரதேச சபைகளின் செயலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர்கள், ஒப்பந்தகாரர்கள், பாரவூர்தி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

ராஜபக்சர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள நாமல்! மகிந்த உட்பட பலர் கலக்கத்தில்

ராஜபக்சர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள நாமல்! மகிந்த உட்பட பலர் கலக்கத்தில்

விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் குறித்த தவறான தகவல்கள் : சந்தேக நபர் கைது

விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் குறித்த தவறான தகவல்கள் : சந்தேக நபர் கைது

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US