ஸ்டீல்ஸ் அவென்யூ வீதி விரிவாக்கப் பணிக்கு ஒன்ராறியோ அரசு நிதி ஒதுக்கீடு
“ஸ்டீல்ஸ் அவென்யூ” வீதி விரிவாக்கத்திற்கு ஒன்ராறியோ அரசு நிதியுதவி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒன்ராறியோ அரசுடன் மத்திய அரசாங்கம் இணைந்து ரொறன்ரோ நகரில் மிகவும் முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு ஆதரவு கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நாட்டில் டெங்கு நோயாளர்களின் இறப்பு வீதம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
வீதி புனரமைப்பு திட்டம்
இதன் மூலம் இணைக்கப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் சமூகங்களை உருவாக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த முதலீட்டின் ஒரு பகுதியாக, ஸ்கார்பரோ - ரூஜ் பார்க் பகுதி குடியிருப்பாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான, டாப்ஸ்காட் வீதி (Tapscott Road) முதல் நைன்த் லைன் (Ninth Line) வரையிலான ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் (Steeles Ave E) வீதியை விரிவுபடுத்துவதற்கான செலவில் 90 சதவீதத்தை ஒன்ராறியோ மற்றும் மத்திய அரசாங்கம் ஏற்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தினால், ஸ்கார்பரோ குடியிருப்பாளர்களுக்கு குறுகிய பயண நேரமாகவும், குறைந்த போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பான மற்றும் சீரான வீதிகள் ஆகிய வசதிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளன.
அத்துடன், குடும்பங்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் உள்ளூர் வணிகர்களுக்கு சிறந்த போக்குவரத்து இணைப்புகளை வழங்கவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் வீதி விரிவாக்கமானது, ஸ்கார்பரோவை அதன் அண்டை சமூகங்களுடன் இணைக்கும் ஒரு பரபரப்பான வழித்தடத்தில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.
ஒன்ராறியோ அரசு நிதியுதவி
இதன் மூலம் அன்றாடப் பயணம் மிகவும் வசதியானதாக மாறும். இந்த திட்டம் தொடர்பா அமைச்சர் விஜய் தணிகாசலம் கருத்து தெரிவிக்கையில்,
டாப்ஸ்காட் வீதி மற்றும் நைன்த் லைன் இடையேயான ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் வீதியை விரிவுபடுத்துவதற்கான செலவில் 90 சதவீதத்தை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து எங்கள் அரசு ஏற்பதில் நான் பெருமையடைகிறேன். ஸ்கார்பரோ பகுதி மக்கள் பல ஆண்டுகளாக இதனைக் கேட்டு வருகின்றனர், தற்போது நாங்கள் அதனை செய்து முடிக்கிறோம்.

இதன் மூலம் பயண நேரம் குறையும், போக்குவரத்து நெரிசல் நீங்கும் மற்றும் நமது சமூகத்தின் வாழ்க்கை முறை மேலும் வசதியாகும்.
ரொறன்ரோ முழுவதும் உள்ள குடும்பங்கள், வணிகங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான வீதிகள், போக்குவரத்து இணைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அனைத்து நிலை அரசாங்கங்களுடனும் இணைந்து செயல்படுவதில் ஒன்ராறியோ அரசு கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முதலீடு பிரதிபலிக்கிறது என்றார்.