தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
துறைசார் அமைச்சரின் தலையீட்டின் கீழ் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன இதனை தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் போராட்டம்
அதிகாரிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலைப்பளு மிக்க தருணத்திலும் தமது பிரச்சினைகளுக்கு அமைச்சர் தலையீடு செய்வது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது கமிட்டிகளை அமைத்து பிரச்சினைகளை திசை திருப்பவதற்கு தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
