விபத்தில் உயிரிழந்த சனத் நிசாந்த: கொள்கலன் சாரதியிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் சொகுசு கார் மோதியதாக கூறப்படும் கொள்கலன் வண்டியின் சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அவர் இன்று (12.02.2024) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதன்போது அவரிடம் சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை ஆரம்பம்
விபத்து இடம்பெற்ற விதம் சந்தேகத்திற்குரியதாக உள்ளதால், இது குறித்து முறையான விசாரணை நடத்துமாறு சனத் நிசாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
