ராஜாங்க அமைச்சு பதவிகளை பெற கடும் போட்டி:அரசாங்கத்துடன் இணையும் சுதந்திரக் கட்சியின் மேலும் நால்வர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்துக்கொள்வார்கள் என தெரியவருகிறது.
இதனையடுத்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள சுதந்திரக் கட்சியினரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிக்கும்.அரசாங்கத்தில் இணைவது சம்பந்தமாக அவர்கள் கட்சியின் மத்திய செயற்குழுவிடம் விளக்கமளிக்க தீர்மானித்துள்ளனர்.
மைத்திரியை தவிர அனைவரும் அரசாங்கத்தில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது எஞ்சியுள்ள ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்ட பின்னர், அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் எதுவும் நடத்தப்படாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பாக கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவுக்கு தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் இந்த நிலைமை காரணமாக கட்சிக்கு மேலும் வலுவாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ராஜாங்க அமைச்சு பதவிகளுக்கு கடும் போட்டி
இதனிடையே ராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
20 முதல் 25 ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார் எனக் கூறப்பட்ட போதிலும் அந்த எண்ணிக்கை 40 வரை அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சூழ்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சி இருக்கும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவிர ஏனைய நான்கு பேர் அரசாங்கத்தில் இணையவுள்ளனர்.
ராஜாங்க அமைச்சர்கள் அடுத்த வாரம் சத்தியப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை நியமிக்கப்படும் போது போட்டியான நிலைமை ஏற்பட்டதுடன் அமைச்சு பதவிகள் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri
