புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயம் நோக்கி பாத யாத்திரை
கிளிநொச்சி மாவட்டத்தில் திருச்சிலுவை பாத யாத்திரை சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிலுவைப் பாதையானது, இயக்கச்சி புனித பிரான்சிஸ் சவேரியார், வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார், கட்டைக்காடு புனி கப்பலேந்தி மாதா ஆகிய ஆலயங்களில் இருந்து புல்லாவெளி புனித செபஸ்தியார் தேவாலயம் நோக்கி சென்றுள்ளது.
கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து பங்குத்தந்தை தலைமையில் ஆரம்பமான பாத யாத்திரை திருப்பலியுடன் புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயத்தில் நிறைவுபெற்றுள்ளது.
யாத்திரை
இந்த யாத்திரையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, இயக்கச்சி பங்குமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |