அர்ச்சுனா எம்பி மீதான தடை! நாடாளுமன்றில் குரல் எழுப்பிய சிறீதரன்!
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு நாடாளுமன்றில் சில தடைகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் ஏதெனும் தவறுதலாக பேசியிருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் நாங்கள் மன்னிப்பு கேட்கின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டிருப்பது ஆரோக்கியமான ஒரு விடயமாக இருக்காது.
1977ஆம் ஆண்டில் இந்த நாடாளுமன்றத்திலிருந்த சிறில் மெத்தியூ என்ற அமைச்சர் தமிழினத்திற்கெதிராக தன்னுடைய வார்த்தைகளை கொட்டினார்.
ஆனால் அவர் மீது இந்த சபை ஒரு காலத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை அவரின் கருத்துக்களை ஹன்சாட்டிலிருந்து தூக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |