தமிழர்களின் இருப்பை அழிக்க நினைத்தால் அது ஒருகாலமும் முடியாது: சிறிதரன் பகிரங்கம்(Video)
துப்பாக்கிகளையும், குண்டுகளையும் வைத்துக்கொண்டு தமிழர்களின் இருப்பை அழிக்க நினைத்தால் அது ஒருகாலமும் உங்களால் முடியாது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(06.12.2023) இடம்பெற்ற புத்தசாசனம் மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு மீதான வரவு செலவு திட்ட விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்ட விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நிலங்களை பிடிப்பதற்கும், அதற்கான ஆதாரங்களை முன்வைப்பதற்கும் இனவாதத்தினை பிரயோகிக்கின்றீர்கள்.
இவ்வாறான ஒரு பின்னணியில் நீங்கள் எப்படி இந்த நாட்டை கட்டியெழுப்பபோகின்றீர்கள். நாட்டை எவ்வாறு முன்னேற்ற போகின்றீர்கள்.
எத்தனை விகாரைகளை நெடுந்தீவிலும், கெளரிமுனையிலும் கட்டலாமா என சிந்திக்கின்றீர்கள். ஆனால் பொலன்னறுவையிலும் அநுராதபுரத்திலும் உள்ள சிவ ஆலயங்கள் இதுவரை கட்டப்படவும் இல்லை புனரமைக்கப்படவும் இல்லை." என்றார்.
மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
