தமிழரசுக் கட்சியின் சஜித் ஆதரவு நிலைப்பாட்டை முற்றாக நிராகரித்த சிறீதரன்
தமிழர்கள் திரட்சியாகத் தமிழ்ப் பாெது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியாவில் (Vavuniya) இன்று (16) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் விசேட குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்பாேதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய விசேட குழுக் கூட்டத்திலும் மத்திய குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளேன்.
சிங்கள தேசிய வேட்பாளர்கள் எவரினதும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் அரசியல் உரிமை, தன்னாட்சி தொடர்பில் எதுவும் இல்லை.இதனால் நான் அதனை ஏற்றுக்காெள்ளவில்லை.
இந்நிலையில், தமிழர்கள் திரட்சியாக தங்களின் தேசத்தின் இருப்பையும், தங்களின் அடிப்படை அரசியல் உரிமைகளையும் நிலைநிறுத்துவதற்கு தமிழ்ப் பாெது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam