சட்டத்தை மீறும் சிங்கள மதகுருமார்கள்..! ஞானமுத்து ஸ்ரீநேசன் குற்றச்சாட்டு
அரசியல் யாப்பு ரீதியாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் நிலையில், தற்போது மத குருமார்கள் சட்டத்தை மீறி செயற்படுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் நேற்று(28.05.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தியதாக 22 பேர் கைது
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டவிரோத செயற்பாடுகளில் சில சிங்கள மதகுருமார்கள் ஈடுபடுகின்றனர். எனினும், இத்தகைய செயற்பாடுகள் அனைத்து மதகுருமார்களையும் கூறவில்லை.
சட்டத்தை மீறி செயல்படும் மதகுருமார்களைப் பற்றி நாம் கருத்து தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
இதன்படி, அண்மையில், தாய்லாந்தில் இருந்து 22 பௌத்த தேரர்கள் போதைப்பொருள் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, அண்மையில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அது நீதிமன்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
இந்நிலையில், ஜனாதிபதி அண்மையில் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டதாகக் கூறப்படும் தகவலின்படி, பௌத்த சாசனத்திற்கும் பௌத்த மதகுருமார்களுக்கும் தனியான விசேட நீதிக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌத்த மதகுருமார்களின் குற்றச் செயல்கள் அதிகரிப்பு
“சட்டவாட்சி” என்ற அடிப்படை கோட்பாட்டின்படி, சட்டத்தின் முன் யாவரும் சமம் என கூறப்படுகிறது. அதுவே சட்டவாட்சியின் முக்கிய அடிப்படையாகும். அவ்வாறிருக்கையில், குறிப்பாக பௌத்த மதகுருமார்களுக்கென தனியான நீதிக்கட்டமைப்பு உருவாக்கப்படுவது, பொதுவான நீதிமன்றங்களைத் தவிர்த்து விசேட நீதிமன்றங்கள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலையை உருவாக்குகிறது.
இந்த நிலைமை சட்டவாட்சியில் பாரபட்சமான சூழலை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இன, மத, மொழி அடிப்படைகளில் மக்கள் அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்பட்டு வரும் சூழல் ஏற்கனவே காணப்படுகிறது.

இத்தகைய சூழலில், பௌத்த மதகுருமார்களுக்கென தனிப்பட்ட நீதிக்கட்டமைப்பை உருவாக்கும் முயற்சி, டைசி (Dicey) முன்வைத்த சட்டவாட்சி கோட்பாட்டிற்கு முரணானதாக அமையும்.
அத்துடன், சாதாரண குற்றச்சாட்டுக்குட்பட்டவர்கள் ஒரு வகையான நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவும், விசேட நபர்கள் தனியான நீதிமன்றங்களில் விசாரிக்கப்படவும் செய்யப்படும் நிலையில், ஜனநாயகத்தின் அடிப்படையான சட்டவாட்சி முறையாக பேணப்பட முடியாத சூழலாக அமையாது என்றார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan