மக்களின் மனங்களை கொலை செய்யும் சிறிநேசன்: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கண்டனம்
நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மக்களின் மனங்களைக் கொலை செய்கின்றார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று(25.03.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அடிக்கடி களவு, கொலை, கப்பம், என்று பேசிக் கொண்டிருக்கின்றார். உண்மையில், நீங்கள்தான் மக்களின் மனங்களை கொலை செய்து கொண்டிருக்கின்றீர்கள்.
சட்ட நடவடிக்கை
மக்களிடம் வாக்குகளைப் பெற்று மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைக்க முடியாமல் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களின் அபிலாசைகளை கொலை செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரணதண்டனை என மட்டக்களப்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றனர்.
உண்மையில் அதை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். அது மாத்திரமல்ல, எமது கட்சியின் சட்ட ஆலோசகர்கள் நீதிமன்ற கட்டளையினை கோரி சட்டத்தரணி ஊடாக விண்ணப்பித்திருக்கின்றோம்.

அந்த நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிற்பாடு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்கள் மிக மோசமாக நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து இழிவுப்படுத்தி பொய்யான கருத்தை வெளியிட்டது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருக்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri