இலங்கையின் நான்காவது தடுப்பூசி எப்போது வழங்கப்படும்? சுகாதார அமைச்சின் தகவல்!
இலங்கையில் கொரோனாவுக்கு எதிராக நான்காவது தடுப்பூசி வழங்குவது தொடர்பில், விவாதிப்பதற்கு இது பொருத்தமான நேரம் அல்ல என்று சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தன இதனை செய்தியாளர்களி;டம் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தடுப்பூசி(பூஸ்டர்) இன்னும் பெருந்தொகையானோருக்கு செலுத்தவேண்டியுள்ளது. இந்தநிலையில் இலங்கையில் நான்காவது தடுப்பூசி தொடர்பாக எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புகிறவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸரை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சுவீடன் மற்றும் இஸ்ரேல் என்பன சிரேஸ்ட பொதுமக்களுக்கு நான்காவது தடுப்பூசிகளை வழங்குவது குறித்து பரிந்துரை செய்துள்ளது. அதேநேரம் தென்கொரியா நான்காவது தடுப்பூசியை வழங்கி வருகிறது



