வயலுக்குள் கற்களை பரப்பி விவசாய நடவடிக்கையை தடுக்கும் தொல்பொருள் திணைக்களம்: தாயொருவர் பகிரங்க குற்றச்சாட்டு (VIDEO)
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் தனது வயலுக்குள் கற்களை பரப்பி விவசாயம் செய்யவிடாது தடுத்து இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக தாயொருவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அபகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
எங்களுடைய காணிகளை பிடித்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் இடம்பெயர்ந்து சென்று பல வருடங்களாகியும் விவசாயம் செய்யும் காணிகளை கூட தடை செய்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் நேற்றையதினம் (28.08.2023) அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam