வயலுக்குள் கற்களை பரப்பி விவசாய நடவடிக்கையை தடுக்கும் தொல்பொருள் திணைக்களம்: தாயொருவர் பகிரங்க குற்றச்சாட்டு (VIDEO)
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் தனது வயலுக்குள் கற்களை பரப்பி விவசாயம் செய்யவிடாது தடுத்து இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக தாயொருவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அபகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
எங்களுடைய காணிகளை பிடித்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் இடம்பெயர்ந்து சென்று பல வருடங்களாகியும் விவசாயம் செய்யும் காணிகளை கூட தடை செய்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் நேற்றையதினம் (28.08.2023) அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam