யாழ்.மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு: வர்த்தமானி வெளியீடு
யாழ் மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (06.01.2023) வெளியாகியுள்ளது.
யாழ் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்பட்ட போது, முதல்வர் வி.மணிவண்ணன் பதவியை துறந்தார்.
முதல்வர் தெரிவு இடம்பெறாது
இதனால் குழப்பமான சூழல் ஏற்பட்டது, உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்திருந்தார்.
யாழ் மாநகரசபையின் எதிர்காலம் குறித்து சட்டமா அதிபரிடம் வினாவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் முதல்வர் தெரிவு
எனினும், மீண்டும் முதல்வர் தெரிவு நடத்தப்படலாமென்றும் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். அது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் இன்று (06.01.2023) வெளியாகியுள்ளது.





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
