வெளிநாடொன்றில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரி மீது விமானி கடுமையான தாக்குதல்
தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கும், விமானிக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தாய்லாந்துக்கான பொறுப்பதிகாரி அமிதாப் அந்தனிபிள்ளை மற்றும் UL403 விமானத்தின் விமானி ஆகியோரே இவ்வாறு மோதிக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த விமானத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதாகக் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சோதனை செய்ய முயன்றபோதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
அதிகாரி மீது விமானி தாக்குதல்
சோதனையின் போது விமானி தன் மீது தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்துக்கான பொறுப்பதிகாரி அமிதாப் அந்தனிபிள்ளை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 19 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri