ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் கடந்த சில காலமாக நிலவி வரும் நிதி நெருக்கடி காரணமாக அதனை விற்பனை செய்வதற்கான விலைமனுக்களை கோர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
புதிய விமான கொள்வனவு
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு குத்தகை வசதியின் கீழ் 4 புதிய விமானங்களை கொள்வனவு செய்வதற்கான தீர்மானம் தொடர்பிலும் விளக்கமளித்திருந்தார்.
மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்புடன், தேவையான புதிய விமானங்களை கொள்வனவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |