கொழும்பில் இளைஞரொருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை
கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் இளைஞரொருவர் வானில் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெமட்டகொட லக் ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு வானில் கடத்திச்செல்லப்பட்டு கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை விசாரணைக்குட்படுத்த உள்ளதாக ஒரு குழுவினர் கடத்தி சென்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சித்திரவதை செய்யப்பட்டு கொலை
இவ்வாறு கடத்தப்பட்ட இளைஞன் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, அன்றைய தினம் ஏழு மணியளவில் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக விடப்பட்டுள்ளார்.

இதன்பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொர்பில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 20 மணி நேரம் முன்
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri