இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுத் மையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை, பொலன்னருவை, மாத்தளை , மட்டக்களப்பு, கண்டி, அம்பாறை , கம்பஹா , கேகாலை , நுவரெலியா, பதுளை , கொழும்பு, களுத்துறை, ரத்னபுரி , மொனராகலை , காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல் , சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னலின்போது ஏற்படும் சேதத்தை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.