கனடாவின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இலங்கை
இலங்கை அடுத்த மாதம் போர் வெற்றியை கொண்டாடும் போது கனேடியத் தலைவர்கள் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்களா என்பது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருப்பதாக இலங்கை (Sri Lanka) இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) போர் வெற்றி கொண்டாட்ட நிகழ்வுக் காலத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.இது இரண்டு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர மோதலைத் தூண்டியுள்ளது.
குற்றச்சாட்டு
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், இதே குற்றச்சாட்டை கனேடிய பிரதமர் சுமத்துவாரா என்பதை இலங்கை அரசாங்கம் எச்சரிக்கையுடன் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போரின் போது நடந்த சம்பவங்கள் இனப்படுகொலைக்கு சமமானவை அல்ல என்று கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் முடிவு செய்திருந்தாலும், கனேடிய தலைவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam