கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட சீருடை துணி விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சீருடை துணி விநியோகம்
இதேவேளை உள்ளூர் விநியோகஸ்தர்களால் வழங்கப்பட்ட 3,831,000 மீட்டர் சீருடை துணியில் 3,561,000 மீட்டர் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27,000 மீட்டர் சீருடை துணி காலி, களுத்துறை மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் இறுதிக் கட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலை சீருடைக்கான தேவை 12,694,000மீட்டர் எனவும், 4.2 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர் பிக்குகளுக்கு இது விநியோகிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
