மொட்டுக்கட்சியின் தவிசாளர் பதவியில் மாற்றம்! மகிந்த வெளியிட்ட தகவல்
கட்சியை விட்டு வெளியேறி, அரசிலிருந்து வெளியேறி கட்சிக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்பவர்களின் பதவிகள் பறிபோகும். அது தான் பீரிஸுக்கும் நடந்தது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொட்டுக்கட்சியின் தவிசாளராக செயற்பட்டு வந்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நீக்கப்பட்டு அப்பதவிக்கு சிரேஷ்ட பேராசிரியர் உத்துராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தற்போது டலஸ் அணி பக்கம் உள்ள பீரிஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் பொதுச்சபையின் நடவடிக்கை
இது தொடர்பில் மொட்டுவின் தலைவர் மகிந்த ராஜபக்ச எம்.பி. கருத்துத் தெரிவிக்கும் போது, "பதவிகள் நிரந்தரம் இல்லை. அது முதலில் தேடி வரும், பின்னர் பறிபோகும் அல்லது பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வரும். நாட்டின் நன்மை கருதி பிரதமர் பதவியைக்கூட நான் இராஜினாமா செய்திருந்தேன்.
தற்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் சபையின் தீர்மானத்துக்கமைய மொட்டுவின் தவிசாளராக இருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நீக்கப்பட்டு புதிய தவிசாளராக சிரேஷ்ட பேராசிரியர் உதுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் பொதுச் சபையின் இந்த நடவடிக்கையை எவரும் சவாலுக்குட்படுத்த
முடியாது. கட்சியின் கோட்பாட்டை மீறிச் செயற்பட்ட காரணத்தால் தான் பீரிஸின்
பதவி பறிபோனது. இதுதான் உண்மை.
கட்சியை விட்டு வெளியேறி - அரசிலிருந்து வெளியேறி கட்சிக்கும், நாட்டுக்கும்
துரோகம் செய்பவர்களின் பதவிகள் பறிபோகும்
பீரிஸுக்குப் பல தடவைகள் அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால், அந்த அழைப்புக்களை
அவர் உதாசீனம் செய்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri

பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடி... இந்த நாட்டின் முடிவால் இந்தியாவுடன் கைகோர்க்கும் சீனா News Lankasri
