எதிர்வரும் வாரம் அரசியலில் அதிரடி மாற்றங்கள்! பிரதமர் பதவி விலக்கப்படலாம் - 39 சுயாதீன எம்.பிக்களுடன் இடைக்கால அரசாங்கம்

Prime minister Government Of Sri Lanka Sri Lanka Podujana Peramuna President of Sri lanka Sri Lankan political crisis
By Mayuri May 08, 2022 04:52 AM GMT
Report

ஜனாதிபதி, பிரதமர் பாதுகாப்பாகவே உள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீதிக்கிறங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

இடைக்கால அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளது.

உண்மையை மறைக்கும் பிரதமர் செயலகம் - அம்பலப்படுத்தும் ஜனாதிபதி செயலக அதிகாரி 

எதிர்வரும் வாரம் அரசியலில் அதிரடி மாற்றங்கள்! பிரதமர் பதவி விலக்கப்படலாம் - 39 சுயாதீன எம்.பிக்களுடன் இடைக்கால அரசாங்கம் | Srilanka Political Crisis Weerasumana Weerasinghe

சர்வ கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் நாளை அல்லது நாளை மறுதினம் பிரதான எதிர்க்கட்சிகளுடன் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

சாதகமான பதில் கிடைக்காவிடின் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 39 பேரையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்படும்.

எதிர்வரும் வாரம் அரசியலில் அதிரடி மாற்றங்கள்! பிரதமர் பதவி விலக்கப்படலாம் - 39 சுயாதீன எம்.பிக்களுடன் இடைக்கால அரசாங்கம் | Srilanka Political Crisis Weerasumana Weerasinghe

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பிரதமரின் பதவி விலகல், இடைக்கால அரசாங்கம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரம் பிரதமர் பதவி விலக்கப்படலாம் அல்லது அவர் பதவி விலக நேரிடலாம்.

எதிர்வரும் வாரம் அரசியலில் அதிரடி மாற்றங்கள்! பிரதமர் பதவி விலக்கப்படலாம் - 39 சுயாதீன எம்.பிக்களுடன் இடைக்கால அரசாங்கம் | Srilanka Political Crisis Weerasumana Weerasinghe

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைகிறது. ஜனாதிபதி, பிரதமர் பாதுகாப்பாகவே உள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீதிக்கிறங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து விரைவாக பொதுத்தேர்தலை நடத்துவது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை பொறுத்தவரை சற்று மோசமான நிலை! பிரதமரிடம் நேரடியாக கூறப்பட்ட விடயம் (Video) 

பிரதமர் பதவி விலகல்

தான் பதவி விலகப் போவதில்லை என தொடர்ந்தும் கூறி வந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தான் இணங்க தயார் என அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருந்தார்.

எதிர்வரும் வாரம் அரசியலில் அதிரடி மாற்றங்கள்! பிரதமர் பதவி விலக்கப்படலாம் - 39 சுயாதீன எம்.பிக்களுடன் இடைக்கால அரசாங்கம் | Srilanka Political Crisis Weerasumana Weerasinghe

20வது திருத்தச் சட்டத்தின் கீழ் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் தற்போது தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

பசிலின் கோரிக்கை

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி தனக்கு வழங்கப்படுமாயின் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பலத்தை தன்னால் நிரூபிக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எதிர்வரும் வாரம் அரசியலில் அதிரடி மாற்றங்கள்! பிரதமர் பதவி விலக்கப்படலாம் - 39 சுயாதீன எம்.பிக்களுடன் இடைக்கால அரசாங்கம் | Srilanka Political Crisis Weerasumana Weerasinghe

பிரதமர் பதவிக்காக தொடரும் போட்டிகள்

இதற்கிடையில் பிரதமர் பதவியை தனக்கு தருமாறும் தன்னால் சிறப்பாக செயற்பட முடியுமென சில அரசியல்வாதிகள் கேட்டு வருவதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, பல அரசியல்வாதிகள் பகிரங்கமாக மேடைகளில் பிரதமர் பதவிக்கு அரசியல் முக்கியஸ்தர்களை பரிந்துரைக்கவும் செய்கின்றனர்.

இதேநேரம் அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து பலருக்கு பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பும் செல்வதாக தெரியவருகிறது.

இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் வாரம் அரசியலில் அதிரடி மாற்றங்கள்! பிரதமர் பதவி விலக்கப்படலாம் - 39 சுயாதீன எம்.பிக்களுடன் இடைக்கால அரசாங்கம் | Srilanka Political Crisis Weerasumana Weerasinghe

பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது தொடர்பான எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் மீண்டும் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

03 Jan, 2021
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில், Scarborough, Canada

31 Dec, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

03 Jan, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

சுருவில், டோட்மண்ட், Germany, Kierspe, Germany, Hildesheim, Germany

30 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mülheim, Germany

05 Jan, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

22 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி, Germany

02 Jan, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

03 Jan, 1996
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, மானிப்பாய், London, United Kingdom

31 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US