நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்றிய சிறந்த தலைவர் ரணில்!பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் புகழாரம்
நாட்டை நெருக்கடியிலிருந்தும்,பயங்கரவாதிகளிடமிருந்தும் காப்பாற்றிய சிறந்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியிலான நேரத்திலும் நாட்டை பொறுப்பேற்ற தலைவர் என்பதினாலேயே அவர் மதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டைக் காப்பாற்றிய தலைவர்
மகிந்த ராஜபக்ச நாட்டை விடுதலைப்புலிகளிடமிருந்து காப்பாற்றியதைப் போன்று அண்மையில் தலைதூக்கியுள்ள பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆவார்.
ரணில் விக்ரமசிங்க தனது சொந்த வீடு எரிக்கப்பட்ட போதும் நாட்டினை பொறுப்பேற்று ஆட்சியை வழமைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam