சுற்றி வளைக்கப்பட்ட விடுதி: இரு பெண்கள் உட்பட மூவர் கைது
கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவ பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது விபச்சார விடுதியை நிர்வகித்து வந்த நபர் மற்றும் பெண்கள் இருவர் உள்ளடங்களாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
தங்கொட்டு, டயகம, மாதம்பே ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 29, 31 மற்றும் 38 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You may Like this Video...