இலங்கையில் மோசமான உணவு பற்றாக்குறை: உலக உணவுத் திட்டம்
உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் அப்துர் ரஹீம் சித்தீக் இதனை இன்று(24) கொழும்பில் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு இலங்கை பங்குச்சந்தைகள் வீழ்ச்சி: முகவர்கள் வெளியிட்ட தகவல் |
இது தொடர்பில் அவர் தெரிவிப்பதாவது,
உணவு பணவீக்கம்
கடந்த மாதத்தில் இலங்கையின் உணவு பணவீக்கம் 80 வீதத்தை அடைந்து இருக்கிறது. இது சில மாதங்களில் அதிகரிக்கக்கூடும்.
தற்போது இந்த நிலைமையை சமாளிப்பதற்காக இலங்கையில் பல குடும்பங்கள் உணவு உட்கொள்ளலை சுருக்கியுள்ளன.
எதிர்நோக்கும் பாதிப்புக்கள்
மேலும் பெரும்பாலான குடும்பங்கள் இளையவர்களுக்கு மாத்திரம் உணவு வழங்களில் முன்னுரிமையை கொடுத்துள்ளன.
இந்த நிலையில் உலக உணவுத்திட்டம் 3.4 மில்லியன் மக்களுக்கு தமது உதவிகளை வழங்கவுள்ளது. அத்துடன் 1.4 மில்லியன் மக்களுக்கு நிபந்தனையற்ற வகையில் உதவிகளை செய்வதற்கு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார் .
உலக உணவு திட்டம்
இதன்படி காலி, நுவரெலியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 45,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 180,000 பேருக்கு அடுத்த மாத ஆரம்பத்தில் உலக உணவுத் திட்டம் பண விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இலங்கை நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.
மேலும் மில்லியன் கணக்கானவர்கள் போசனைக் கொண்ட உணவுகளை உட்கொள்வதில்லை. அதே நேரத்தில் நெருக்கடி வெளிவரும்போது தற்போதைய நிலைமை மோசமடையக்கூடும் என்று ஐக்கிய நாடுகளின் நிறுவனம் எச்சரித்துள்ளது.
வெளிநாட்டு அரசாங்கங்களின் நன்கொடைகள்
இதனையடுத்து வெளிநாட்டு அரசாங்கங்களின் நன்கொடைகள் மூலம் மொத்த நிதித் தேவையான 63 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இதுவரை 20.14 மில்லியன் அமெரிக்க டொலர்களை(32%) உலக உணவுத் திட்டம் பெற்றுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத உயர் பணவீக்கம், விலையேற்றம், எரிபொருள் இருப்புக்கள் வீழ்ச்சியடைந்துள்ளமையால் உதவி நிறுவனங்களிடமிருந்து மட்டுமன்றி சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்தும், தனியார் துறைகளிடமிருந்தும் ஒருங்கிணைந்த உதவியைக் கோருவதாக உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.