பணவீக்கம் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து
இலங்கையில் பணவீக்கம் காரணமாக உணவு திருட்டு சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தோட்டங்களில் பழங்கள் மற்றும் மரக்கறிகள் திருடும் சம்பவங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள்
நாட்டின் பல்வேறு சுப்பர் மார்க்கெட்கள் உட்பட பல்வேறு வர்த்தக நிலையங்களில் இருந்து ஆயிரக்கணக்கான உணவுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடைகளில் உணவு பொருட்கள் திருடப்படுவது அதிகரித்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சமைத்த உணவுப் பொருட்கள் திருடப்பட்ட பல சம்பவங்கள் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ளன.
உணவுக்காக போராடும் மக்கள்
நாட்டில் பணவீக்கம் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உணவுக்காக போராடும் மக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மூன்று வேளைக்கு பதிலாக ஒரு வேளை அல்லது அதிகபட்சம் இரண்டு வேளை உண்ணும் குடும்பங்களின் எண்ணிக்கை பத்து இலட்சமாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
