குடும்பமாக குடியேறுவதற்கு பொருத்தமான நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
டிஜிட்டல் நிதிச் சேவை நிறுவனமான 'ரெமிட்லீ' (Remitly) வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான உலகளாவிய குடியேற்றக் குறியீட்டு தரவுகளின்படி, ஒட்டுமொத்த சர்வதேச தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, லக்செம்பர்க் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.
எனினும், "குடும்பங்கள் குடியேறி வாழ்வதற்கு மிகவும் உகந்த நாடுகள்" என்ற குறிப்பிட்ட பிரிவின் கீழேயே ஸ்பெயின் மற்றும் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு
சிறந்த கல்வி முறை மற்றும் மிகக் குறைந்த குழந்தை பராமரிப்புச் செலவு போன்ற 34 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, புலம்பெயர் குடும்பங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான நாடாக இலங்கை இந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

மேலும், சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நாடுகளில் இது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இது அங்கு குடிபெயர விரும்பும் குடும்பங்களுக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க நன்மையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அறிக்கையில் மிகவும் பின்தங்கியிருந்த நாடுகள் இப்போது முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.