தேர்தல் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை - கலாநிதி பிரதிபா வெளியிட்ட தகவல்
தேர்தல் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படாத நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் எந்தவொரு தீர்மானமும் செல்லுபடியாகாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள போதிலும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை.
தேர்தல் திகதியை வர்த்தமானி மூலம் அறிவிப்பதே சட்டம்.எனவே வர்த்தமானி அறிவித்தல் கண்டிப்பாக வெளியிடப்பட வேண்டும்.
தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு
மேலும், உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானியில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் ஐந்து பேரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கும் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.தேர்தல் திகதியை தீர்மானித்தல் போன்ற முக்கிய பணிகளுக்கு முழு ஆணைக்குழுவின் தீர்மானமும் தேவை
தேர்தல் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை எனக்கூறுவதன் மூலம் மறைமுகமாக என்ன தெரிவிக்கப்படுகின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.