இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்! ஆய்வில் வெளியான தகவல்
இலங்கை பெண்களில் ஐந்தில் ஒரு பங்கினர், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்டுள்ள தேசியக் கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி 20.4% பெண்கள் தங்கள் நெருங்கிய துணையால் வன்முறைக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களின் நல்வாழ்வு கணக்கெடுப்பு (WWS) என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் (20.4%) நெருங்கிய துணையால் உடல் அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளார்
எனினும் பாலியல் வன்முறையை அனுபவித்த பெண்களில் பாதி (49.3%) பேர் முறையான சட்ட உதவியை எங்கும் நாடவில்லை.
அதேநேரம் நெருக்கமான துணையால் உடல் அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்ட பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (35.7%) தமது உயிரைப் போக்கிக்கொள்ள நினைத்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையில் வன்முறை ஏற்படுத்தும் கடுமையான விளைவுகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 18 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri