இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்! ஆய்வில் வெளியான தகவல்
இலங்கை பெண்களில் ஐந்தில் ஒரு பங்கினர், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்டுள்ள தேசியக் கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி 20.4% பெண்கள் தங்கள் நெருங்கிய துணையால் வன்முறைக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களின் நல்வாழ்வு கணக்கெடுப்பு (WWS) என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் (20.4%) நெருங்கிய துணையால் உடல் அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளார்
எனினும் பாலியல் வன்முறையை அனுபவித்த பெண்களில் பாதி (49.3%) பேர் முறையான சட்ட உதவியை எங்கும் நாடவில்லை.
அதேநேரம் நெருக்கமான துணையால் உடல் அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்ட பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (35.7%) தமது உயிரைப் போக்கிக்கொள்ள நினைத்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையில் வன்முறை ஏற்படுத்தும் கடுமையான விளைவுகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 11 மணி நேரம் முன்
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய நபர்
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri