இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்! ஆய்வில் வெளியான தகவல்
இலங்கை பெண்களில் ஐந்தில் ஒரு பங்கினர், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்டுள்ள தேசியக் கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி 20.4% பெண்கள் தங்கள் நெருங்கிய துணையால் வன்முறைக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களின் நல்வாழ்வு கணக்கெடுப்பு (WWS) என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் (20.4%) நெருங்கிய துணையால் உடல் அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளார்
எனினும் பாலியல் வன்முறையை அனுபவித்த பெண்களில் பாதி (49.3%) பேர் முறையான சட்ட உதவியை எங்கும் நாடவில்லை.
அதேநேரம் நெருக்கமான துணையால் உடல் அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்ட பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (35.7%) தமது உயிரைப் போக்கிக்கொள்ள நினைத்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையில் வன்முறை ஏற்படுத்தும் கடுமையான விளைவுகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri