வெனிசுலாவில் தொடரும் பதற்றம் - தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைப்பற்றியதன் மூலம், உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று (06) காலை ஆசிய சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $4,461 ஆக அதிகரித்துள்ளது.
உலக சந்தையின் தங்க விலை
இதற்கிடையில், உலக சந்தையின் தங்க விலையுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலை ரூ.3,000 அதிகரித்துள்ளது என்று சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ.337,600 ஆக அதிகரித்துள்ளது. இது ஜனவரி 1 ஆம் திகதி, 327,500 ரூபாவாக இருந்துள்ளது.
இதற்கிடையில், ஜனவரி 1 ஆம் திகதி ரூ.354,000 ஆக இருந்த "24 கரட்" தங்கத்தின் விலை இன்று 365,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri