எரிபொருள் விலை திருத்தம்: பொருளாதார வல்லுநர்கள் வெளியிட்ட தகவல்
நாட்டில் எரிபொருள் விலைகள் மாதந்தோறும் திருத்தப்பட்டாலும், அதன் பலன்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல அளித்த பேட்டியில், பொதுமக்களுக்கு நன்மைகளை வழங்க சம்பந்தப்பட்ட தரப்பினர் முறையான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்தின்படி கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் விலைகள் சிறிய அளவில் திருத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் எரிபொருள் விலை திருத்தத்தால் பயனடைய வேண்டுமானால், பொதுப்போக்குவரத்துத் துறையில் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாதாந்த விலை திருத்தம்
மாதாந்திர விலை திருத்தத்தின்படி மாதத்தின் முதல் திகதி எரிபொருள் விலைகள் சிறிய அளவில் குறைக்கப்பட்டன.
அதன்படி, ரூ.299 ஆக இருந்த 92 ஒக்டேன் பெட்ரோல் லிட்டரின் விலை 5 ரூ. குறைக்கப்பட்டது. அந்த பெட்ரோல் லிட்டரின் விலை தற்போது ரூ.294 ஆக உள்ளது.

அதேபோல், ரூ.313 ஆக இருந்த ஒரு லிட்டர் சூப்பர் டீசலின் விலை ரூ.5 அதிகரிக்கப்பட்டது. இதற்கிடையில், ரூ.335 ஆக இருந்த 95 ஒக்டேன் பெட்ரோல் லிட்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
ரூ.277 ஆக இருந்த ஒரு லிட்டர் வெள்ளை டீசலின் விலையும் திருத்தப்படவில்லை. நவம்பர் மாதத்திற்கான ரூ.180 ஆக இருந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri