இராணுவ முகாமில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வைத்தியர்களுக்கு சந்தர்ப்பம்! இராணுவத்தளபதி இணக்கம்
நாட்டில் தொடரும் எரிபொருள் நெருக்கடி காரணமாக அருகாமையில் உள்ள இராணுவ முகாமில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு இராணுவத் தளபதியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வைத்தியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்கும் போது கலவரம் ஏற்படும் சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கர்ப்பிணி பெண்கள் தாம் கர்ப்பம் தரித்துஏழு மாதங்கள் ஆகும் போது உடுப்பதற்கு தேவையான உடைகளுக்கு மேலதிகமாக ஒரு கலன் எரிபொருளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை பெண் ஊழியர்களின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam