கர்ப்பிணி பெண்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கர்ப்பிணி பெண்கள் தாம் கர்ப்பம் தரித்துஏழு மாதங்கள் ஆகும் போது உடுப்பதற்கு தேவையான உடைகளுக்கு மேலதிகமாக ஒரு கலன் எரிபொருளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை பெண் ஊழியர்களின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கர்ப்பணி பெண்கள் வைத்தியசாலைக்கு செல்ல முடியாமல் போகலாம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சில கர்ப்பணி பெண்களுக்கு மகபேறுக்காக வைத்தியசாலைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளமை இதற்கான காரணம் எனவும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
ஒரு கலனில் எரிபொருளை வைத்திருப்பதன் மூலம் எந்த வாகனத்திலாவது கர்ப்பிணி பெண் வைத்தியசாலைக்கு செல்ல முடியும் என சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
மகபேறு வைத்தியசாலையில் நடக்க வேண்டும் என்பது கட்டாயமானது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam