எதிர்காலத்தில் எரிபொருள் பிரச்சினை இன்னும் மோசமாகும்!எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு
இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதிக்கான கடன் கடிதங்களை திறப்பது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 23ஆம் திகதி நாட்டிற்கு வரவிருந்த எண்ணெய் தாங்கி கப்பலின் ஆர்டர் செய்வதில் கடன் கடிதம் விவகாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதி
இந்நிலைமையால் பணத்திற்காக மட்டுமே எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
இதன்படி, எதிர்வரும் காலங்களில் எரிபொருள் நெருக்கடி மிகவும் பாரதூரமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த எரிபொருள் டேங்கர் வரும் சரியான திகதியை அறிய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
