பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் கிடைக்கப்பெறும் பெருந்தொகை பணம்! எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஊடாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இலாபம் பெரும் விதம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினையிட்டு இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
CPC Petroleum Product Cost Breakdown after the Price Revision & the new Taxes??
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 3, 2022
NB - Petrol 95 Price is based on the last import cargo price 5 months ago.
Further calculation notes are included below the table. pic.twitter.com/9X6wGJsstR
இலாபம் பெறும் விதம்
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் மூலம் 159.61 ரூபா இலாபத்தை ஈட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டருக்கு 33.62 ரூபாவும், ஆட்டோ டீசல் லீட்டருக்கு 1.55 ரூபாவும், லங்கா சுப்பர் டீசல் லீட்டருக்கு 41.89 ரூபாவும் இலாபமாகப் பெறப்படுகின்றது.
மேலும், ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விற்பனையில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 30.62 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய விலை திருத்தம் மற்றும் வரிகளுக்குப் பின்னர் இந்த இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.