எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் மற்றுமொரு மோசடி அம்பலம்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கு டீசல்,பெட்ரோல் நிரப்பப்பட்ட பின்னர் மோசடி சம்பவமொன்று இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது.
வரிசைகளில் காத்திருந்து வாகனங்கள் எரிபொருளை நிரப்ப முன்னோக்கி செல்லும் போது வாகன உரிமையாளர்கள்,ஊழியர்கள் வாகனங்களில் காணப்படும் எரிபொருளை கொள்கலன்களில் சேமித்து பதுக்கி வைக்கின்றமை தெரியவந்துள்ளது.
மேலும், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டு வெளியேறி மீண்டும் கொள்கலன்களில் சேமித்து மீண்டும் வரிசைகளில் காத்திருக்கின்றமையும் தெரியவந்துள்ளது.

நாட்டில் கடுமையாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,இவ்வாறு ஒரு சிலர் தேவைக்கு அதிகமாக எரிபொருளை சேமித்து வைக்கின்றமை மேலும் நெருக்கடி அதிகரிக்கும் வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
ரஷ்யாவை தாக்கிய பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணை: பிரித்தானியா மீது ரஷ்யா நேரடி குற்றச்சாட்டு News Lankasri