தனியார் துறை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கோரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடி காரணமாக தனியார் துறையினரை வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு மக்கள் எரிபொருள் நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தனியார் துறை ஊழியர்களை கடமைகளுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி, முடிந்தவரை வீட்டிலிருந்தே கடமைகளை இணைவழியில் முன்னெடுக்குமாறும் தனியார் நிறுவன தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி
இதேவேளை,எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளால் கல்வித்துறையினர் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி ஜுன் 20ஆம் திகதி முதல் இரண்டு வார காலத்திற்கு வீட்டில் இருந்து ஒன்லைன் மூலம் அவர்கள் பணியாற்றக்கூடிய வகையில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விசேட சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri