மன்னார் மாவட்டத்தில் முறையற்ற எரிபொருள் விநியோகம்! பாரதூரமான விளைவுகள் எச்சரிக்கை

Mannar Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Ashik Jul 01, 2022 07:45 PM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற எரிபொருள் விநியோகம் தொடர்பாகவும் நாளுக்கு நாள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி பொது அமைப்புக்களின் ஒன்றியம் இன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  ஏ.ஸ்ரான்லி டிமெல் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் அனுப்பி வைத்துள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

 மன்னார் மாவட்டத்திற்கு கடந்த சில வாரங்களாக சாதாரண நிலமையை விட பல மடங்கு எரிபொருள் வந்துள்ளன புள்ளிவிபரங்களின்படி. ஆனால் வாகனத்திற்கு எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கிறது ஒழுங்கு முறையாக எந்தவித சிஸ்ரமும் உருவாக்கப்படவில்லை.

அதிகாரிகள் தமது இஷ்டத்திற்கு செயற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

அதிகாரிகள் தமது இஷ்டத்திற்கு செயற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மிகக் குறைந்த சனத்தொகை கொண்ட மாவட்டத்தில் சிஸ்டத்தை உருவாக்குவது ஓரளவு இலகுவானது. அசாதாரண சூழ்நிலையில் பணி செய்வது என்பது சவாலுக்கு உரியது என்பதை நாம் புரிந்து கொள்ளாமல் இல்லை.

எனவே மீனவர்களும், விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அரச ஊழியர்கள் அலுவலக அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு எரிபொருள் வழங்கும் முறைமை முற்றிலும் முரனானது. அதில் பல ஆள் மாறாட்டமும் வணிகமும் நடைபெறுகின்றன. ஆதாரம் உண்டு.

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற எரிபொருள் விநியோகம்!  பாரதூரமான விளைவுகள் எச்சரிக்கை | Srilanka Fuel Crisis In Mannar

30.06.2022 ஒரு டோக்கன் ஆயிரம் ரூபாவிற்கு விற்பனையாகியது. அத்தியாவசிய தேவையுள்ள திணைக்களங்களுக்கு ஒதுக்கீடு செய்யுங்கள். குறித்த திணைக்களங்கள் இவர்களுக்கு பகிர்வு செய்யட்டும். யார் அந்த அத்தியாவசிய அரசு நிறுவனங்கள் என்பதில் பெரும் கேள்வி உண்டு.

இந்த அத்தியாவசிய தேவையை பெற எரிபொருள் இல்லாமல் எப்படி பொதுமக்கள் வருவார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி?

எரிபொருள் நெருக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புக்கள்

கடந்த வாரத்தில் வைத்தியசாலை போவதற்கு எரிபொருள் இல்லாமல் நாட்டில் மூவர் இறந்து போனார்கள் என்பது யாவரும் அறிந்ததே! மன்னார் நகர சபையும் தமது துப்புரவு பணியை நிறுத்தி விட்டதாக அறிகிறோம்.

மீன் வியாபாரிகள்,மரக்கறி,வியாபாரிகள், பால் வியாபாரிகள், எந்த சேவைக்குள் உள்ளடங்குகின்றார்கள்? இவர்கள் அத்தியவசியம் இல்லையா? இவர்களைப் பற்றி எவரும் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. எந்த சூழலிலும் வல்லோன் வாழ்வான் என்ற எழுதப்படாத விதியே நடைமுறையில் உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற எரிபொருள் விநியோகம்!  பாரதூரமான விளைவுகள் எச்சரிக்கை | Srilanka Fuel Crisis In Mannar

சகல வாகனங்களுக்கும் பங்கீட்டு அட்டை வழங்குங்கள். மன்னார் மாவட்டம் என்பது 05 பிரதேச செயலாளர் பிரிவை கொண்டது. நகரத்தை கடந்தும் கிரமங்களில் உள்ளவர்களுக்கும் எரிபொருள் கிடைக்க வழி ஏற்படுத்துங்கள்.

புதிய எரிபொருள் மாபியா முகவர்கள் 

மாந்தை மேற்கு பிரதேசத்தில்; ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் கூட இல்லை. ஒழுங்குமுறையான சிஸ்டம் இன்மையால் அவசியம் எரிபொருள் தேவைப்படுகிறவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் புதிய எரிபொருள் மாபியா முகவர்கள் உருவாகி விட்டனர். ஒரு லீற்றர் பெற்றோல் 2000 ரூபாவிற்கு மேல் விற்பனை ஆகிறது. டீசல் 1000 ரூபாவுக்கு மேலாக மண்ணெண்ணை 1000 ரூபாவுக்கு மேலாக வேறு மாவட்டங்களுக்கு கொண்டு போய் விற்பனை செய்கிறார்கள்.இதை உருவாக்கியது சிஸ்டம் இல்லாத எரிபொருள் பகிர்வே.

சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு எதிராக முறைப்பாடு

தயவு செய்து உடனடியாக ஒரு முறைமையை உருவாக்குங்கள் சிஸ்டம் இன்மையால் முரண்பட்டு நானாட்டான் பிரதேச செயலாளர் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்த சம்வங்களும் நிகழ்ந்துள்ளன. ஒரே நபர்கள் மாறி. மாறி எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பயன் பெறுகிறார்கள்.

ஆகவே இந்த நிலை தொடர்ந்தால் மன்னார் மாவட்டத்தில் மிகப் பெரும் வன்முறை தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை தடுப்பதற்கான தார்மீக பொறுப்பும் கடமையும் தங்களுக் குரியது என்பதை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US